லிங்குசாமி இயக்கிவரும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் அக்ஷரா கவுடா நடித்து வருகிறார்.
தெலுங்கில் முன்னணி நாயகனாக வலம்வரும் ராம் பொத்தினேனி நடித்துவரும் படத்தை இயக்கி வருகிறார் லிங்குசாமி. இதில் நதியா, கீர்த்தி ஷெட்டி, ஆதி உள்ளிட்ட பலர் ராம் பொத்தினேனியுடன் நடித்து வருகிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதன் படப்பிடிப்பு மும்முரமாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. கரோனா வழிமுறைகளைப் பின்பற்றி மும்முரமாகப் படப்பிடிப்பு நடத்தி வருகிறது படக்குழு. இந்தப் படத்தின் கதைப்படி வில்லனுடன் பயணிக்கும் கதாபாத்திரம் ஒன்றுக்கு பல்வேறு நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு.
தற்போது அதில் நடிக்க அக்ஷரா கவுடா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதில் மதுரை தமிழ் மற்றும் கடப்பா தெலுங்கு பேசும் கதாபாத்திரமாக இவருடையது இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழில் ரெஜினாவுடன் அக்ஷரா கவுடா நடித்துள்ள 'சூர்ப்பனகை' திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. கார்த்திக் ராஜு இயக்கியுள்ள இந்தப் படத்தில் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 mins ago
தொழில்நுட்பம்
54 mins ago
சினிமா
2 hours ago
க்ரைம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
2 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
இந்தியா
4 hours ago