பெரும் விலைக்கு விற்பனையான 'கே.ஜி.எஃப் 2' இசை உரிமை

By செய்திப்பிரிவு

'கே.ஜி.எஃப் 2' படத்தின் இசை உரிமை பெரும் விலைக்கு விற்பனையாகியுள்ளது.

'கே.ஜி.எஃப்' படத்தைத் தொடர்ந்து 'கே.ஜி.எஃப் 2' தயாரிப்பில் உள்ளது. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் 'கே.ஜி.எஃப் 2' வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தின் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமத்தைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது.

தற்போது 'கே.ஜி.எஃப் 2' படத்தின் இசை உரிமை விற்பனையாகியுள்ளது. தென்னிந்திய மொழிகளின் இசை உரிமையை லஹரி மற்றும் டி-சீரிஸ் நிறுவனம் இணைந்து 7.2 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்குரிய படம் என்பதால், இவ்வளவு பெரிய விலைக்கு விற்பனையாகி இருப்பதாக வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

'கே.ஜி.எஃப் 2' படத்தை செப்டம்பர் 9-ம் தேதி வெளியிடப் படக்குழு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

சினிமா

9 mins ago

விளையாட்டு

32 mins ago

வணிகம்

44 mins ago

இந்தியா

46 mins ago

சினிமா

52 mins ago

ஓடிடி களம்

1 hour ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

மேலும்