“நான் இயக்கும் பிரபாஸ் படத்தின் முதல் நாள் வசூல் ரூ.150 கோடியாக இருக்கும்” - சந்தீப் ரெட்டி வாங்கா

By செய்திப்பிரிவு

சென்னை: “நானும் பிரபாஸும் இணையும் புதிய படத்தின் முதல் நாள் வசூல் ரூ.150 கோடியாக இருக்கும்” என இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அண்மையில் அளித்த பேட்டியில், “நானும் பிரபாஸும் இணையும் புதிய படத்தின் பட்ஜெட்டால் அந்த தயாரிப்பாளர் பாதுகாப்பாக இருப்பார் என நினைக்கிறேன். சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் மூலமாகவே பட்ஜெட்டை மீட்டெடுத்துவிட முடியும்.

எல்லாம் சரியாக நடந்தால் படத்தின் முதல் நாள் வசூலே ரூ.150 கோடியாக இருக்கும். இது ஒரு வர்த்தக கணக்கீடு. படம் நன்றாக இருந்தால் இதுபோன்ற ஒரு படத்துக்கு ஒரே நாளில் ரூ.150 கோடி என்பது எளிதாக இருக்கும்” என்றார்.

‘அனிமல்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா, பிரபாஸுடன் இணையும் படம் ‘ஸ்பிரிட்’. இப்படத்தின் 60 சதவீதம் ஸ்கிரிப்ட்டை சந்தீப் ரெட்டி வாங்கா முடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்