ஹைதராபாத்: கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து, இயக்கிய படம்‘காந்தாரா’. கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்திருந்தனர். ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. ரூ.16 கோடி செலவில் தயாராகிரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதன் 2-ம் பாகம் உருவாகும் என்று படக்குழு கூறியிருந்தது. ஆனால்,அது காந்தாரா படத்தின் முதல் பாகம் என்று அறிவித்த படக்குழு, அதற்கு காந்தாரா: சாப்டர் 1 என்று டைட்டில் வைத்துள்ளது.
இந்தப் படத்துக்கான பூஜை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது.இந்நிலையில் இதில் நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். கன்னட நடிகையான இவர் தமிழில் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களில் நடித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
42 mins ago
இந்தியா
1 hour ago
வணிகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இணைப்பிதழ்கள்
3 hours ago
க்ரைம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
உலகம்
5 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
5 hours ago