ராமராக ரன்பீர், ராவணனாக யாஷ்: 3 பாகங்களாக உருவாகிறது ராமாயணம்

By செய்திப்பிரிவு

மும்பை: தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வரும் நடிகை சாய் பல்லவி இப்போது இந்தியிலும் கவனம் செலுத்திவருகிறார். பிரபல இந்தி ஹீரோ ஆமிர்கான் மகன் ஜூனைத் கான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ள சாய் பல்லவி, அடுத்து ராமாயணக் கதையில் சீதையாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை பிரபல இந்தி இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்குகிறார்.

இதில் ராமராக ரன்பீர் கபூரும் ராவணனாக யாஷும் நடிக்க இருக்கின்றனர். மூன்று பாகங்களாக இந்தப் படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க இருக்கின்றனர். இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரியில் தொடங்க இருக்கிறது. இதன் படப்பிடிப்பில் யாஷ் ஜூலை மாதம் கலந்துகொள்ள இருக்கிறார். அவர் தொடர்பான காட்சிகள் இலங்கையில் படமாக்கப்படுகின்றன.

முதலில் இந்தப் படத்தில் ஆலியா பட் சீதையாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. அவர் விலகியதால், சாய் பல்லவி நடிக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மாவட்டங்கள்

6 mins ago

உலகம்

11 mins ago

தமிழகம்

16 mins ago

தொழில்நுட்பம்

41 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

1 hour ago

மாவட்டங்கள்

2 hours ago

மேலும்