சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு தேசத்தின் பாதுகாப்புத் துறையிலுள்ள வேலைவாய்ப்புகளை அறிய செய்யும் நோக்கில் ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘தேசம் காக்கும் நேசப் பணிகள்’ எனும் வெப்பினார் தொடர் நிகழ்வை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிகழ்வில் சாய்ராம் கல்வி நிறுவனமும், ஆர்.எம்.கே. கல்வி நிறுவனமும் இணைந்திருக்கின்றன.
இந்த இணையவழி தொடர் நிகழ்வின் 8, 9-ம் பகுதிகள் வரும் பிப். 4, 5-ம் தேதிகளில் நடைபெறவுள்ளன.
நாளை (பிப். 4) மாலை 4 மணிக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஓய்வுபெற்ற கமாண்டன்ட் டி.வின்சென்ட் தாமஸ், ‘மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF)உள்ள வேலைவாய்ப்புகள்’ எனும் தலைப்பில் உரையாற்ற உள்ளார்.
பிப். 5-ம் தேதி மாலை 4 மணிக்கு தமிழக காவல்துறையின் முன்னாள் டிஜிபி ஜி.திலகவதி, ஐபிஎஸ் ‘குற்றப்பிரிவு விசாரணை (CBI), தேசிய விசாரணை நிறுவனம் (NIA) ஆகியவற்றிலுள்ள வேலைவாய்ப்புகள்’ எனும் தலைப்பிலும் உரையாற்ற உள்ளார்.
இந்த இரு வெப்பினார் நிகழ்வுகளையும் ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஒருங்கிணைத்து, கலந்துரையாடவுள்ளார்.
இந்நிகழ்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள்https://www.htamil.org/DKNP04 என்ற லிங்கில் பதிவுசெய்து கொள்ளுங்கள். இந்நிகழ்வில் பங்கேற்க முதலில் பதிவு செய்யும் 10 மாணவர்களுக்கு டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய ‘போர்ப்பறவைகள்’ எனும் நூல் பரிசாக வழங்கப்படும்.
மேலும் பங்கேற்கும் அனைத்து மாணவர்களும் டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய அறிவியல் நூல்களைச் சிறப்புக் கழிவு விலையில் பெறலாம். கூடுதல் விவரங்களைப் பெற 9944029700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
23 mins ago
க்ரைம்
1 hour ago
உலகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வேலை வாய்ப்பு
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago