அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நாளை கிண்டியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

By செய்திப்பிரிவு

சென்னை: வேலைவாய்ப்புத் துறை இயக்குநர் கொ.வீரராகவராவ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் வேலைதேடுவோர், வேலை அளிக்கும் நிறுவனங்களின் சந்திப்பு நிகழ்ச்சிநடத்தப்படுகிறது. இதன்மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து நாளை அக்.28-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. சென்னை, கிண்டி - ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 8, 10, 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் ஆகிய கல்வித் தகுதியை உடைய அனைவரும் பங்கேற்கலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இம்முகாம் வாயிலாகப் பணி நியமனம் பெறும் இளைஞர்களின் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இதில் கலந்துகொள்ள எந்தவித கட்டணமும் செலுத்தத் தேவை இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

37 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

4 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்