காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (12-ம் தேதி) நடைபெற உள்ளது.

இதில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.

இதில், இளநிலை பொறியியல் பட்டம் படித்தவர், டிப்ளமோ, ஐடிஐ, பிளஸ் 2 மற்றும் 10-ம்வகுப்பு படித்தவர்கள் பங்கேற்கலாம்.

காலை 10 மணிக்கு தொடங்கும் முகாமில் கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் முகாமில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 044-27237124 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

எனவே, விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இம்முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது என இரு மாவட்ட நிர்வாகங்களும் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

30 mins ago

சினிமா

51 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

58 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்