வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சார்பில் சென்னையில் வரும் 27-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

By செய்திப்பிரிவு

சென்னை: வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சென்னையில், வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் கொ.வீரராகவ ராவ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகள் ‘வேலைவாய்ப்பு வெள்ளி’யாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினங்களில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

அந்த வகையில், சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து, வரும் 27-ம் தேதி (வெள்ளி) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன.

இந்த முகாம், கிண்டி தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். இதில், 8, 10, பிளஸ் 2 வகுப்புகள், ஐடிஐ, பாலிடெக்னிக் டிப்ளமோபடித்தவர்கள், கலை அறிவியல், மற்றும் தொழில்நுட்பபட்டதாரிகள் கலந்துகொள்ளலாம். 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

25 நிறுவனங்கள்

இந்த முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளன. எனவே, இந்த அரிய வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

55 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்