குரூப் 1 முதன்மை தேர்வுகள் தொடங்கின

By செய்திப்பிரிவு

சென்னை: குரூப் 1 முதன்மைத் தேர்வுகள் நேற்று தொடங்கின.

குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வை சென்னையில் அமைக்கப்பட்டிருந்த 22 மையங்களில் சுமார் 2 ஆயிரம் பேர் எழுதினர். தேர்வர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

முதன்மைத் தேர்வு மொத்தம் 4 தாள்களை கொண்டது. இதில் முதல் தாள் கட்டாய தமிழ் தகுதிதேர்வாகும். நேற்று நடைபெற்ற கட்டாய தமிழ் தாள் தேர்வானது வெறும் தகுதிக்கானது என்பதால் அதில் 40 மதிப்பெண்கள் எடுத்தாலே போதும். அந்த வகையில் வினாக்கள் எளிதாகவே இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.

4 நாள் நடக்கிறது: தொடர்ந்து ஆக.13 வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்து நேர்முகத் தேர்வை சந்திப்பர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

சினிமா

12 hours ago

மேலும்