மத்திய அரசில் காலியாக உள்ள 2,675 இளநிலை பொறியாளர் பணிக்கு தேர்வு: விண்ணப்பிக்க எஸ்எஸ்சி அழைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசின் இளநிலைப் பொறியாளர் பணி தேர்வுக்கு ஆகஸ்ட் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று எஸ்எஸ்சி தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் இளநிலைப் பொறியாளர் (சிவில், மெக்கானிக்கல் & எலக்ட்ரிக்கல்) பதவியில் உள்ள 2,675 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அக்டோபரில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வெழுத விரும்புபவர்கள் ssc.nic.in என்ற இணையதளம் வழியாக ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
21 நகரங்களில் தேர்வு மையம்: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய ஆக.17, 18-ம் தேதிகளில் அவகாசம் வழங்கப்படும். இந்த தேர்வுக்காக தமிழகத்தில் 7 உட்பட தென் மண்டலத்தில் 21நகரங்களில் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இத்தேர்வு மொத்தம் 2 தாள்களை கொண்டது.

கல்வித் தகுதி: இதற்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, தேர்வுக் கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை மேற்கண்ட வலை தளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று எஸ்எஸ்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

உலகம்

8 mins ago

இந்தியா

19 mins ago

கார்ட்டூன்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

58 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்