வணிகம்

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 34 புள்ளிகள் உயர்வு

செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (செவ்வாய்க்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 195 புள்ளிகள் உயர்வடைந்து 57,849 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 54 புள்ளிகள் உயர்ந்து 17,039 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:05 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 34.03 புள்ளிகள் உயர்வடைந்து 57,687.89 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 01.15 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 16,984.55 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் நிலவிய சாதகமான சூழல்கள் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று வர்த்தகத்தை ஏற்றத்துடனேயே தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை இன்டஸ்இன்ட் பேங்க், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி, டாடா ஸ்டீல், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், பவர் கிரிடு கார்ப்பரேஷன், பஜாஜ் ஃபின்சர்வ், டைட்டன் கம்பெனி, ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. ஏசியன் பெயின்ட்ஸ், பாரதி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், எம் அண்ட் எம், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஆக்ஸிஸ் பேங்க், டெக் மகேந்திரா, மாருதி சுசூகி, எல் அண்ட் டி, நெஸ்ட்லே இந்தியா பங்குகள் சரிவில் இருந்தன.

SCROLL FOR NEXT