மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (புதன்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 286 புள்ளிகள் உயர்வடைந்து 58,361 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 69 புள்ளிகள் உயர்வடைந்து 17,177 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கியது. காலை 09:49 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 177.59 புள்ளிகள் உயர்வடைந்து 58,252.27 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 41.20 புள்ளிகள் உயர்வடைந்து 17,148.70 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளின் சாதமான சூழல், அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகிதம் குறித்த முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் முதலீட்டாளர்களிடம் ஏற்பட்டுள்ள நம்பிக்கை போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று வர்த்தகத்தை ஏற்றத்துடனேயே தொடங்கின.
தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை எல் அண்ட் டி, எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி, நெஸ்ட்லே இந்தியா, ஐடிசி பங்குகள் சரிவில் இருந்தன.
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
39 mins ago
விளையாட்டு
50 mins ago
இந்தியா
58 mins ago
வாழ்வியல்
4 mins ago
க்ரைம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
உலகம்
1 hour ago
கருத்துப் பேழை
44 mins ago
விளையாட்டு
1 hour ago
உலகம்
1 hour ago
க்ரைம்
2 hours ago
வணிகம்
2 hours ago