புதுடெல்லி: டிஜிட்டல் அல்லது இ-ரூபாய் புழக்கம் ரூ.130 கோடி அளவுக்கு உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அவர் தெரிவித்துள்ளதாவது: டிஜிட்டல் ரூபாய் எனப்படும் இ-ரூபாயை ரிசர்வ் வங்கி, மொத்த விற்பனை பிரிவுக்கு கடந்தாண்டு நவம்பர் 1 முதலும், சில்லறைப் பிரிவுக்கு டிசம்பர் 1 முதலும் பரீட்சார்த்த முறையில் அறிமுகப்படுத்தியது.
இந்த நிலையில், பிப்ரவரி 28 நிலவரப்படி மொத்தம் ரூ.130 கோடி மதிப்புக்கு இ-ரூபாய் புழக்கத்தில் உள்ளது.
டிஜிட்டல் ரூபாய் மொத்த விற்பனை சோதனை முறை அறிமுகத்தில் எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோட்டக் மஹிந்திரா, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி வங்கி மற்றும் ஹெச்எஸ்பிசி ஆகிய 9 வங்கிகள் பங்கேற்றுள்ளன.
பிப்ரவரி 28-ன் படி கணக்கிடப்பட்ட மொத்த டிஜிட்டல் ரூபாய் புழக்கத்தில் சில்லறைப் பிரிவு ரூ.4.14 கோடியும், மொத்த விற்பனை பிரிவு ரூ.126.67 கோடியும் பங்களிப்பை கொண்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
உலகம்
33 mins ago
தமிழகம்
38 mins ago
உலகம்
43 mins ago
வாழ்வியல்
18 mins ago
விளையாட்டு
46 mins ago
சுற்றுச்சூழல்
50 mins ago
சினிமா
58 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago