சென்செக்ஸ் 320 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் இந்த வாரத்தின் முதல் நாள் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 320 புள்ளிகள் (0.53 சதவீதம்) உயர்வடைந்து 60,914 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 91 புள்ளிகள் (0.50 சதவீதம்) உயர்வடைந்து 18,118 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை வர்த்தகத்தை ஏற்றத்துடனேயே தொடங்கின. காலை 09:27 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 229.46 புள்ளிகள் உயர்ந்து 60,851.23 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 90.80 புள்ளிகள் உயர்வடைந்து 18,118.45 ஆக இருந்தது

உலக அளவில் நிலவிய சாதகமான சூழல், கடந்த வாரத்தில் வெளியான சில வங்கிகளின் சாதகமான காலாண்டு அறிக்கைகளால் வங்கி, நிதி பங்குகள் ஏற்றம் பெற்றன. இதனால் இந்திய பங்குச்சந்தைகளில் மூன்றாவது வாரத்தின் முதல் நாள் வர்த்தகம் ஏற்றத்தில் நிறைவடைந்தது. வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் இன்றைய நாளில் அதிகபட்சமாக 500 புள்ளிகள் வரை உயர்ந்தது.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 319.90 புள்ளிகள் உயர்வடைந்து 60,941.67 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 90.90புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,118.55 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஹிந்துஸ்தான் யுனிலீவர், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டெக் மகேந்திரா, டிசிஎஸ், இன்போசிஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், கோடாக் மகேந்திரா பேங்க், பாரதி ஏர்டெல், நெஸ்ட்லே இந்தியா, எம் அண்ட் எம், விப்ரோ, ஹெச்டிஎஃப்சி, ஐடிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஆக்ஸிஸ் பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்வடைந்து இருந்தன. ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், மாருதி சுசூகி, டைட்டன் கம்பெனி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, டாடா ஸ்டீல் என்டிபிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

ஓடிடி களம்

29 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

23 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

மேலும்