அனைத்து மின்வாகனங்களுக்கும் 2025 வரை 100% வரி விலக்கு: அரசாணை வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: உள்துறைச் செயலர் கே.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: கடந்த 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்நாடு மின்வாகனக் கொள்கையின் தொடர்ச்சியாக பேட்டரி மூலம் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்க வேண்டும் என போக்குவரத்து வாகன தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, நிகழாண்டு ஜன.1 முதல் 2026-ம்ஆண்டு டிச.31-ம் தேதி வரை வரி விலக்களிக்கக் கோரி போக்குவரத்து ஆணையரும் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதை கவனமாக பரிசீலித்த அரசு, நிகழாண்டு ஜன.1 முதல் 2025-ம் ஆண்டு டிச.31-ம் தேதி வரை அனைத்து போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத மின்வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்களித்து ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மின்வாகனக் கொள்கையின்படி, கடந்த ஆண்டு டிச.31-ம் தேதி வரை மின்சார வாகனங்களுக்கு வரிவிலக்களிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் 2 ஆண்டுகளுக்கு வரி விலக்களிக்கும் முடிவுக்கு அண்மையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

சினிமா

2 mins ago

உலகம்

59 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

2 hours ago

மேலும்