பயணிகள் வாகன விற்பனை செப்டம்பரில் 92% உயர்வு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பண்டிகை காலத்தை முன்னிட்டு தேவை அதிகரித்துள்ளதால் கடந்த செப்டம்பர் மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 92% அதிகரித்துள்ளது.

இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்) செப்டம்பர்மாத வாகன விற்பனை தொடர்பானபுள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதத்தில் 3 லட்சத்து 7 ஆயிரத்து 389 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் செப்டம்பர் மாத விற்பனையைவிட 92% அதிகம் ஆகும். கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 212 வாகனங்கள் விற்பனையானது.

இருசக்கர வாகன விற்பனை 13% அதிகரித்து 17 லட்சத்து 35 ஆயிரத்து 199 ஆகி உள்ளது. இது கடந்த ஆண்டின் செப்டம்பரில் 15 லட்சத்து 37 ஆயிரத்து 604 ஆக இருந்தது. இதில்மோட்டார்சைக்கிள் விற்பனை 18% அதிகரித்து 11 லட்சத்து 14 ஆயிரத்து 667 ஆகி உள்ளது. ஸ்கூட்டர் விற்பனை 9% அதிகரித்து 5 லட்சத்து 72 ஆயிரத்து 919 ஆகி உள்ளது.

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் பயணிகள் வாகன விற்பனை 38% அதிகரித்து 10 லட்சத்து 26 ஆயிரத்து 309 ஆகி உள்ளது. இதுபோல இருசக்கர வாகன விற்பனை 13% அதிகரித்து 46 லட்சத்து 73 ஆயிரத்து 931 ஆகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதுவே விற்பனை அதிகரிக்க காரணம் என இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்