அரசின் இ-சந்தை; ஒரே ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி ஆர்டர்: பிரதமர் மோடி பாராட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அரசின் இ-சந்தை ஒரே ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ஆர்டர் பெற்றிருப்பதற்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்

அரசின் இ-சந்தை 2021-22 நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடிக்கு வருடாந்திர கொள்முதல் செய்து சாதனை செய்திருப்பதாகவும், 57சதவீத ஆர்டர் மதிப்பு எம்எஸ்எம்இ துறையிலிருந்து வந்திருப்பதால் அரசு இ-சந்தை இணையதளம் குறிப்பாக எம்எஸ்எம்இ-க்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதவில் கூறியிருப்பதாவது:

‘‘அரசின் இ-சந்தை @GeM_India ஒரே ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ஆர்டர் பெற்றிருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்! முந்தைய ஆண்டுகளிலிருந்து இது குறிப்பிடத்தக்க உயர்வாகும்.

57சதவீத ஆர்டர் மதிப்பு எம்எஸ்எம்இ துறையிலிருந்து வந்திருப்பதால் அரசு இ-சந்தை இணையதளம் குறிப்பாக எம்எஸ்எம்இ-க்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளது.’’ எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

13 mins ago

க்ரைம்

17 mins ago

இந்தியா

15 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்