பன்முக முதலீடுகளை உள்ளடக்கிய ஒரே முதலீட்டு திட்டம்

By செய்திப்பிரிவு

‘‘மாற்றம் ஒன்றே மாறாதது’’ என்றமுதுமொழிக்கு பொருத்தமாக இருக்கக் கூடியது பன்முகமுதலீட்டுத் திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீட்டிலிருந்து கிடைக்கும் வருவாயாகத்தான் இருக்கும். இது இடைக்கால முதலீட்டுத் திட்டங்களைக் காட்டிலும் சிறந்ததாக இருப்பதே சிறப்பு. அந்த வகையில் நீண்டகால முதலீட்டுத் திட்டங்களுக்கு சிந்திப்பதைப்போன்று ஓராண்டுக்கான முதலீடுகளில் கிடைக்கும் வருவாயை முன்கூட்டியே திட்டமிடுவது என்பது மிகவும் சவாலான விஷயமாக இருக்காது.

நடைமுறையில் சொத்து முதலீடுகள் மீதான வருமானம் ஒவ்வொரு ஆண்டும் மாறுபட்டு இருந்ததை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. மேலும் இதில் உள்ள உள்பிரிவு சொத்து முதலீடுகளில் பலவிதமாற்றங்கள் தென்படுகின்றன. இப்போதைய சூழலில் சொத்து முதலீட்டிலான வருமானத்தில் நிலவும் ஸ்திரமற்ற நிலை மற்றும் இவற்றின் மீதான முதலீடுகள் குறித்த விவரங்கள் மிகக் குறைவான அளவில் கிடைப்பது ஆகியவற்றைப் பார்க்கும்போது, நாம் மேற்கொள்ளும் முதலீடுகள் குறித்து விரைவாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.அதிலும் குறிப்பாக அதிக லாபம் ஈட்டும்முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

பங்குச் சந்தையின் சுழற்சியின் போக்கிற்கேற்ப முதலீட்டுத் திட்டங்களை வகுக்க வேண்டிய சூழலுக்கு முதலீட்டாளர்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக வருமானத்தின் மீதானவரி குறித்த பிரச்சினையும் இதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. அந்த வகையில் எந்த திட்டங்களில் முதலீடு செய்வது என்ற குழப்பமான சூழலில் உள்ள முதலீட்டாளர்கள் அவற்றை விடுத்து,ஓரளவு லாபம் தரக்கூடிய பிரிவுகளில் முதலீடு செய்வது, அதற்குரிய திட்டங்களை தேர்வு செய்வது, தங்களது முதலீடுகளை வெவ்வேறு பிரிவுகளில் முதலீடு செய்ய வகைப்படுத்துவதன் மூலம் வருமான வரி சார்ந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

இவற்றுக்கெல்லாம் தீர்வாக அமைவதுதான் பன்முக சொத்து நிதிய திட்டங்கள். இவை முதலீட்டுக்கேற்ப நெகிழ்வுத் தன்மைகொண்டவை. பன்முக முதலீடுகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. குறிப்பாக உள்நாட்டு பங்குச் சந்தை, சர்வதேச பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள், தங்க முதலீடு உள்ளிட்ட பல்வகை கலவை முதலீடுகளை மேற்கொள்கின்றன. இந்த வகையான முதலீட்டுத் திட்டங்கள் பொதுவாக மற்ற முதலீட்டுத் திட்டங்களைப் போல அதிக லாபம் ஈட்டாதவை என்று கருதப்படுகின்றன.

ஆனால் பல்வேறு முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களின் தேவையை பூர்த்தி செய்யக் கூடியவை. அந்த வகையில் பன்முக சொத்து நிதியங்கள் மிகவும் விரும்பத்தக்க முதலீட்டு வாய்ப்பை வழங்கக் கூடியவை. நிரந்தர வருமானத்தை எதிர்நோக்கும் முதலீட்டாளர்களுக்கு அதேசயம் பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்க பாதிப்பை முதலீட்டாளர்களுக்கு தராத முதலீடாக இவை அமையும்.

அந்த வகையில் பன்முக முதலீட்டு திட்டமாக ஐசிஐசிஐ புரூடென்ஷியல் நிறுவனம் பாசிவ் மல்டி அசெட் பண்ட் என்ற நிதித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பன்முக முதலீடுகளை மேற்கொள்வோருக்கு ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பங்குச் சந்தையில் எப்போது முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும் என்பதை உணர்ந்து முதலீடு செய்யும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல முதலீட்டாளர்களுக்கு வருமான வரி குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தாத வகையில் இது அமைந்துள்ளது.

என்.விஜயகுமார்

மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர்

vijayakumar@vbuildwealth.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்