மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை: பவுனுக்கு ரூ. 512 அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. பவுனுக்கு 512 ரூபாய் அதிகரித்துள்ளது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 64உயர்ந்து ரூ.4226-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.33808-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.36680-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை 1 கிராம் வெள்ளி 1.90 ரூபாய் அதிகரித்து ரூ.68.50க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.68,500 ஆக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்