வணிகம்

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 36 புள்ளிகள் சரிவு

செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை சற்று ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 52 புள்ளிகள் உயர்வடைந்து 66,436 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 21 புள்ளிகள் உயர்ந்து 19,716 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சற்று ஏற்றத்துடன் தொடங்கியது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் பயணித்தது. காலை 10:25 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 36.31 புள்ளிகள் சரிவடைந்து 66,347.95 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 05.70 புள்ளிகள் உயர்ந்து 19,678.05 ஆக இருந்தது.

அமெரிக்க பெடரல் வங்கியின் பணக் கொள்கை இந்த வாரம் வெளியாக உள்ள நிலையில் இந்த உலகளாவிய சந்தைகளின் பலவீனமான சூழல்களுக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை நேர்மறையாக, சற்றே ஏற்றத்துடன் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஜெஎஸ்டபிள்யூ ஸ்டீல், அல்ட்ரா டெக் சிமெண்ட், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, எம் அண்ட் எம், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், விப்ரோ, கோடாக் மகேந்திரா பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் உயர்வில் இருந்தன.

ஐடிசி, ஏசியன் பெயின்ட்ஸ், எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் பேங்க், டெக் மகேந்திரா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், இன்போசிஸ், நெஸ்ட்லே இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ், டிசிஎஸ், மாருதி சுசூகி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

SCROLL FOR NEXT