புதுச்சேரியில் புதிதாக 923 பேருக்கு தொற்று உறுதி: கரோனாவால் மேலும் 5 பேர் உயிரிழப்பு

By அ.முன்னடியான்

புதுச்சேரி : கரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 923 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் இன்று (ஜன. 30) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

"புதுச்சேரி மாநிலத்தில் 3,177 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 650 பேர், காரைக்காலில் 186 பேர், ஏனாமில் 72 பேர், மாஹேயில் 15 பேர் என மொத்தம் 923 (29.05 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 60 ஆயிரத்து 747 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் தற்போது மருத்துவமனைகளில் 189 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 10,838 பேரும் என மொத்தமாக 11,027 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் புதுச்சேரி புதிய சாரம் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த 67 வயது மூதாட்டி, முருங்கப்பாக்கம் தெரேசா நகர் 85 வயது மூதாட்டி, மங்கலம் 50 வயது ஆண் நபர், காரைக்கால் புதுத்துறை விஎஸ் நகர் 65 வயது முதியவர், டிஆர் பட்டினத்தைச் சேர்ந்த 73 முதியவர் என 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,928 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.20 சதவீதமாக உள்ளது. புதிதாக 2,433 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 792 (91.94 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தமாக 15 லட்சத்து 33 ஆயிரத்து 395 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது."

இவ்வாறு சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

18 mins ago

சுற்றுச்சூழல்

24 mins ago

தமிழகம்

34 mins ago

சினிமா

40 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

54 mins ago

சினிமா

58 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்