திரிபுரா ஓட்டலில் போலீஸ் காவலில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் குழுவினர்

By செய்திப்பிரிவு

தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்திலிருந்து திரிபுராவுக்கு களப்பணி ஆற்றச் சென்ற குழுவினரை காலையில் இருந்து போலீஸார் காவலில் வைத்துள்ளனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு கள நிலவரம் தெரிந்து கொள்வதற்காக ஐபேக் குழுவினர் திரிபுராவுக்குச் சென்றனர்.
திரிபுராவில் ஒரு ஓட்டலில் அவர்கள் தங்கியிருக்கும் தகவல் அறிந்த அம்மாநில போலீஸார் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்குச் சென்ற ஐபேக் குழுவினரை அங்கேயே முடக்கிவைத்தனர்.

அந்தக் குழுவில் மொத்த 22 ஊழியர்கள் இருந்தனர். கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறிவிட்டதாகக் கூறி அவர்களை போலீஸார் தடுத்து வைத்துள்ளனர். ஆனால், அவர்களோ எவ்வித விதிமுறை மீறலிலும் ஈடுபடவில்லை எனக் கூறுகின்றனர். இத்தகவலை ஐபேக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

திரிபுராவில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு பிப்லப் தேவ் முதல்வராக இருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்