கல்வராயன்மலையில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்ட நிலத்தில், கஞ்சா செடிகளை வளர்த்து வருவதைக் கண்டுபிடித்த சங்கராபுரம் போலீஸார், அது தொடர்பாக இன்று (ஜூன் 24) கண்ணன் என்பவரை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட கல்வராயன் மலை மூளக்காடு அருகே, மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்படும் விளைநிலத்தில் பயிர்களுக்கு இடையே கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக, சங்கராபுரம் வட்ட ஆய்வாளர் பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அவரது தலைமையிலான தனிப்படையினர் நேற்று (ஜூன் 23) மூளக்காடு கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (50) என்பவரின் விவசாய நிலத்தில் சோதனையிட்டபோது, அதில் மர வள்ளிக்கிழங்கு செடிக்கு இடையே பயிரிடப்பட்ட 37 கஞ்சா செடிகளை கண்டுபிடித்து, அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
58 mins ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
வலைஞர் பக்கம்
30 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago