யூடியூப் பார்த்து குக்கரில் சாராயம் காய்ச்சிய அண்ணன் தம்பி உள்ளிட்ட 4 பேர் ராமநாதபுரத்தில் கைது

By எஸ்.முஹம்மது ராஃபி

யூடியூப் பார்த்து குக்கரில் சாராயம் காய்ச்சிய அண்ணன் தம்பி உள்ளிட்ட நான்கு பேர்களை ராமநாதபுரம் போலீசார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் அருகே காட்டூரணியில் எம்ஜிஆர் நகர் பகுதியில் வசிக்கும் சாராயம் காய்ச்சி வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சனிக்கிழமை காட்டூரணியில் போலீஸார் ரோந்து சென்றனர்.

ரோந்தின் போது காட்டூரணியைச் சேர்ந்த இன்பராஜ் (60) அவரது சகோதரர் சங்கர் (55) மற்றும் கார்த்திக்(29), விஜய் (28) ஆகிய 4 பேரும் குக்கரில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த போது பிடிபட்டனர்.

இதையடுத்து அவர்கள் 4 பேர்களையும் கைது செய்த கேணிக்கரை போலீசார் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய குக்கர் உள்ளிட்ட தளவாடப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் ஊரடங்கில் மது கடைகள் அடைக்கப்பட்டதால் மதுபானம் கிடைக்காததால் யூட்யூப் பார்த்து குக்கரைப் பயன்படுத்தி சாராயம் காய்ச்சியதாக தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்