லாட்டரி இல்லாமல் வேறு வழியில் வருமானத்தை ஏற்படுத்தி அரசு, ஏழைகளுக்குத் தரமான மருத்துவம், இலவசக் கல்வி கொடுத்தால் வரவேற்பேன் என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
லாட்டரி சீட் விற்பனையை அரசு நடத்தினால் கோடி, கோடியாகப் பணம் கொட்டும். அதன் மூலம் ஏழைகளுக்குத் தரமான மருத்துவம், இலவசக் கல்வி அளிக்கலாம் என ஏற்கனவே கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்து இருந்தார்.
இதற்குப் பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு எழுந்த நிலையில், நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேசினார். அப்போது அவர் கூறும்போது, ''ஏழைகளுக்குத் தரமான மருத்துவம், கல்வி கொடுப்பதற்காகத்தான் லாட்டரி சீட் விற்பனையை அரசு ஏற்று நடத்த வேண்டும் என கூறினேன். அந்த யோசனை தற்போது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.
லாட்டரி சீட் இல்லாமல், வேறு வழியில் வருமானம் ஏற்படுத்தி ஏழைகளுக்குத் தரமான மருத்துவம், இலவசக் கல்வி ஆகியவற்றைக் கொடுத்தால் வரவேற்பேன்'' என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
வாழ்வியல்
10 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
13 hours ago
ஓடிடி களம்
13 hours ago