பிரேசிலில் கரோனா பலி 4,49,068 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

பிரேசிலில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 4,49,068 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 860 பேர் கரோனாவால் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 4,49,068 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1.6 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, உலகம் முழுவதும் கரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகாரபூர்வ எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்த நிலையில், 34, 59,294 பேர் பலியாகி உள்ளனர்.

கரோனா இரண்டாம், மூன்றாம் அலைகள் மிகத் தீவிரமாகப் பரவி வருகின்றன. இதன் காரணமாக இந்தியா, பிரேசிலில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன.

தடுப்பூசி செலுத்துவதில் பாரபட்சம்

தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதில் உலக நாடுகளிடையே பெரும் வேறுபாடு நிலவுகிறது. வளர்ந்த, வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது தேவைக்கு அதிகமாகத் தடுப்பூசிகளை வாங்கி வைத்துள்ளன. ஏழை நாடுகளோ தடுப்பூசி கிடைக்காமல் திணறி வருகின்றன.

இந்நிலையில் கரோனா தடுப்பூசி காப்புரிமையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள், உலகத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

34 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

4 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்