பழமையான இரணியூர் கோயிலில் 8 சிலைகள் மாயம்: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இரணியூர் கோயிலில் 8 சிலைகள் மாயமானது குறித்து சென்னை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

நகரத்தாரின் 9 கோயில்களில் ஒன்றாக இரணியூர் ஆட்கொண்டநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் சிற்பக் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோயில் சிதிலமடைந்த நிலையில் 1941 முதல் 1944-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் நகரத்தார் புதுப்பித்து கட்டினர்.

தற்போது இக்கோயில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயில் செயல் அலுவலராக காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் செயல் அலுவலர் சுமதி உள்ளார்.

இந்நிலையில் அவர் 1948-ம் ஆண்டு இரணியூர் கோயில் பதிவேடுகளை ஆய்வு செய்தபோது, சோமஸ்கந்தர் , ஸ்கந்தர் , பிரியாவிடை அம்மன் , தனி அம்மாள் , ஞானசம்பந்தர் , சுந்திர மூர்த்தி , நித்திய உற்சவ சுவாமி , மற்றும் நித்திய உற்சவ அம்பாள் ஆகிய 8 பழமையான சிலைகள் காணாதது தெரியவந்தது.

இதையடுத்து அவர் சென்னை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுத்தார். அதன்படி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

ஜோதிடம்

36 mins ago

ஜோதிடம்

51 mins ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்