சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 22-ஆக அதிகரிப்பு

By இ.மணிகண்டன்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மேலும் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.

சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 12ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பவ இடத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

பலத்த தீக்காயமடைந்து சிவகாசி, சாத்தூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவந்த 12 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆனது.

இந்நிலையில், இந்த வெடி விபத்தில் பலத்த தீக்காயமடைந்து சாத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்றுவந்த நடுச்சூரங்குடியைச் சேர்ந்த பவுல்ராஜ் என்பவரது மனைவி ஜெயா (50) இன்று உயிரிழந்தார்.

அதையடுத்து, இவ்விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

19 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்