பளிச் பத்து 47: லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம்

By செய்திப்பிரிவு

கிரிக்கெட் விளையாட்டின் தலைநகரமாக கருதப்படும் லார்ட்ஸ் மைதானம் 1814-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

இந்த மைதானத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவரான ‘தாமஸ் லார்ட்ஸ்’ என்பவரின் நினைவாக இதற்கு லார்ட்ஸ் மைதானம் என்று பெயர் வைக்கப்பட்டது.

லார்ட்ஸ் மைதானம் மெரில்போன் கிரிக்கெட் கிளப்புக்கு (எம்சிசி) சொந்தமானது.

1884-ம் ஆண்டில் இந்த மைதானத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

இந்த மைதானத்துக்குள் கிரிக்கெட் சார்ந்த மிகப்பெரிய அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மிகப்பெரிய அளவிலான நூலகமும் உள்ளது.

2012-ம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக்கில் வில்வித்தைப் போட்டிகள் லார்ட்ஸ் மைதானத்தில்தான் நடத்தப்பட்டன. அதேபோல, 2-வது உலகப் போரின்போது, நிதி திரட்டுவதற்காக இங்கு பேஸ்பால் போட்டி நடத்தப்பட்டுள்ளது.

1934-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை இங்கு ஆடிய டெஸ்ட் போட்டிகள் அனைத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

1930-ல் இங்கு நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸி. வீரர் டான் பிராட்மேன் 254 ரன்கள் குவித்தார்.

இந்த மைதானத்தில் 3 சதங்கள் அடித்த ஒரே வெளிநாட்டு வீரர் என்ற பெருமை, இந்தியாவின் திலீப் வெங்சர்க்காருக்கு உண்டு.

லார்ட்ஸ் மைதானத்தில் 30 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டிகளை ரசிக்க முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்