நெட்டிசன் நோட்ஸ்: பெரியார் பிறந்த நாள் - சமூக நீதி பேசும் எங்கள் அறிவாயுதம்!

By செய்திப்பிரிவு

தந்தை பெரியாரின் 142-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நெட்டிசன்கள் தங்கள் வாழ்த்துகளைப் பதிவிட்டுள்ளனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

ЯΣYӨ

பெரியார் ஐரோப்பாவில்
பிறந்திருந்தால் இன்று
உலகம் முழுக்க அவரது
பிறந்த நாள்
கொண்டாடப்பட்டிருக்கும்.

Bruno Ennares

கேள்வி கேள்...
சிந்தி...

- பெரியார்


Prabakaran Cpr

உன் சாத்திரத்தை விட
உன் கடவுளை விட
உன் வெங்காயம் வெளக்கமாத்த விட
உன் அறிவு பெரிசு... அத சிந்தி..!
-#பெரியார்


Sasikumar

பெரியார் என்னும் பெருங்கடலே!
மானிட சமூகத்தின் மாபெரும் சொத்தே!
திராவிடர் முன்னேற்றத்தின் சுடர் ஒளியே!
அடங்காத அசுரனே!
சளைக்காத எந்திரனே!
அழகே! அறிவே! அன்பே! உயிரே!
ஈகையே! எழுச்சியே! பேரானந்தமே!
சிங்கமே! போராளியே!
பகுத்தறிவே!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

- சிறுதுளி

#பெரியார் வெறும் பெயரல்ல.
சமூக நீதி பேசும் எங்கள் அறிவாயுதம்.


காளைமாடு

இன்று தன்னை இகழ்ந்து கொண்டிருப்பவர்களுக்காகவும் இறுதி வரை போராடினார்..
இன்றும்
இறந்தும் இறவாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் பெரியார்...

Naveen BBC

ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பால் வீழ்ந்து அடிமைபட்டுக் கிடந்த தமிழ்ச்சமூகம் தலைநிமிர்ந்து நிற்கும் தொடக்கமே தந்தை பெரியார்

தமிழன் மகா

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.


கரிகாலன்

சிந்தனையும் சித்தாந்தத்தையும் எப்பொழுதும் யாராலும் அழிக்க முடியாது.


Vivek Muthusamy

கடவுளை மற மனிதனை நினை...

சிவசங்கரன் சு

பெண்களின் அழகையும் ஆடையையும் பற்றிப் பேசியவர்கள் மத்தியில் அவர்களின் மனதையும் உரிமையையும் பற்றிச் சிந்தித்தவன் நீ..

Dr.Safi Nagercoil

முன்னோரையும் ,முன் வழி வந்தோரையும்,
மூடத்தனத்தையும், இக்காலமும் நம்பித் திரியும் சில கூட்டத்திற்கு அரை நூற்றாண்டுக்கு முன்னரே
அறிவியல் கற்பிக்க ஊக்குவித்தவர் இந்தக் கிழவன்
இந்தப் பகலவன் மட்டும் இல்லாது போயிருந்தால் தமிழ்ச் சமூகத்தின் நிலை?

Dr.Chengai E.Sathishkumar

தீண்டாமை ஒழிப்பு
சுயமரியாதை
மூடநம்பிக்கை ஒழிப்பு
பெண் கல்வி

ரத்னா

தொண்டு செய்து பழுத்த பழம்;
தூய தாடி மார்பில் விழும்;
மண்டைச் சுரப்பை உலகு தொழும்;
மனக் குகையில் சிறுத்தை எழும்;
அவர் தாம் பெரியார்
- பாவேந்தர் பாரதிதாசன்

Thamizhan Praba

மானம் கெடுப்பாரை
அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை
எங்கள் தந்தை பெரியார்

GENTLEMAN POSTS

யார் சொல்லியிருந்தாலும்
எங்கு படித்திருந்தாலும்
நானே சொன்னாலும்
உனது புத்திக்கும்,
பொது அறிவுக்கும்,
பொருந்தாத எதையும்
நம்பாதே…

Golden words of " பெரியார் "

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்