இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர்கள். மனக்குழப் பங்கள் நீங்கும். பணவரவு உண்டு.

ரிஷபம்: ஆரவாரமின்றி சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் பயணங் களால் ஆதாயம் உண்டு. விருந்தினர் வருகையுண்டு. நண்பர்கள் ஆதரவு அளிப்பர்.

மிதுனம்: சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து செல்லும். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். முன்கோபத்தால் தேவையில்லாத பகை உண்டாகும்.

கடகம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள், அவர்கள் விரும்பிய படிப்பில் சேர பிடிவாதமாக இருப்பார்கள். வெளி வட்டாரத்தில் நிதானம் அவசியம்.

சிம்மம்: நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும். முன்கோபம் குறையும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும்.

கன்னி: அதிரடியாக செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பணவரவு உண்டு. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டும் முயற்சியில் இறங்குவீர்கள்.

துலாம்: இழுத்தடித்த காரியங்களெல்லாம் இனி முடிவுக்கு வரும். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் நீண்டநாள் கோரிக்கைகளை பூர்த்தி செய்வீர்கள். கலை பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது.

தனுசு: மன உளைச்சல் நீங்கும். கலகலப்பாக சிரித்துப் பேசும் சூழல் அமையும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வாகனப் பழுது நீங்கும். வெளியூர், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

மகரம்: ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். வியாபார ரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத் தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். நண்பர், உறவினர்கள் உதவி கிட்டும். மனக் குழப்பம் நீங்கும்.

கும்பம்: சோர்வு, அலைச்சல் நீங்கி ஆனந்தமாக காணப்படு வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கையில் பணம் தேவையான அளவு இருக்கும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள்.

மீனம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கசப் புணர்வு நீங்கும். கையில் பணம் சேரும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்