Published on : 30 May 2025 19:57 pm
நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது ஆர்சிபி அணி.
இந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்காக உதவிய 9 வீரர்கள் ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளனர்.
டெல்லி அணிக்கு எதிராக 73 ரன்களை விளாசி க்ருணல் பாண்டியா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
மும்பை அணிக்கு எதிராக 32 பந்துகளில் 64 ரன்கள் விளாசி ஆட்ட நாயகன் ஆனார் ரஜத் பட்டிதார்.
லக்னோ அணிக்கு எதிராக 33 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் ஆனார் ஜிதேஷ் சர்மா.
சிஎஸ்கே அணிக்கு எதிராக 14 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் ஆனார் ரொமாரியோ ஷெப்பர்ட்.
ராஜஸ்தான் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகன் ஆனார் ஹேசில்வுட்.
முலான்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக பிலிப் சால்ட் 65 ரன்கள் எடுத்து ஆட்டம் நாயகன் ஆனார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக டிம் டேவிட் மேன் ஆஃப் தி மேட்ச் விருதை வென்றார்.
குவாலிபையர்-1 ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகன் ஆனார் சுயாஷ் சர்மா.