Published on : 03 May 2025 21:03 pm
ஐபிஎல் 2025 சீசனில் லீக் சுற்றோடு வெளியேறியது சிஎஸ்கே. இந்த அணியில் இதுவரை வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் உள்ள வீரர்கள் குறித்து பார்ப்போம்.
22 வயது இளம் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனான வன்ஷ் பேடி இதுவரை சிஎஸ்கே அணிக்காக ஆடும் வாய்ப்பை பெறவில்லை.
31 வயது சுழற்பந்து வீச்சாளரான ஸ்ரேயாஷ் கோபால், ஐபிஎல் அனுபவம் உள்ளவர். இருப்பினும் சிஎஸ்கே அணிக்காக அவர் இதுவரை விளையாடவில்லை.
வேகப்பந்து வீச்சாளர் கமலேஷ் நாகர்கோட்டி உள்ளூர் போட்டிகளில் அனுபவம் கொண்டவர். இருப்பினும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவிலை.
தமிழகத்தை சேர்ந்த பேட்ஸ்மேனான ஆந்த்ரே சித்தார்த் டி20 போட்டிகளில் விளையாடியதே இல்லை. அவருக்கு சிஎஸ்கே வாய்ப்பு வழங்காமல் உள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்த பவுலிங் ஆல்ரவுண்டர் ராமகிருஷ்ண கோஷுக்கும் இதுவரை ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை.