தொடர்ந்து திருச்ஜெபமாலை, இரு நாட்டு மக்களும் சேர்ந்து தூக்கி வந்த சிலுவைப் பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனையும் நடைபெற்றன. இரவு புனித அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர், ஆலயத்தை வலம் வந்தது. இந்த நிகழ்வுகளில் இரு நாடுகளிலிருந்தும் வந்திருந்த பங்குத் தந்தையர்கள், அருட் சகோதரிகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.