Published on : 16 Nov 2023 19:27 pm
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மதுரை பரவை பகுதியை சேர்ந்த வேல்முருகன் களிமண் விளக்கு தயார் செய்யும் காட்சிகள். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை நரிமேடு 27-வது வார்டில் மாமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரே ஜீவா நகர் குறுக்குத் தெருவில் குவிந்து கிடக்கும் குப்பைகள். | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
மதுரை நரிமேடு பகுதியில் எரிவாயு சிலிண்டர் மூலம் சலவை தொழில் செய்யும் ரங்கசாமி. | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
மதுரையில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வருவாய் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பீச் வாலிபால் போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிவகங்கை செல்லும் சாத்தமங்கலம் சாலை ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டது.| படம்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி
மார்க்சிஸ்ட் முதுபெரும் தலைவர் சங்கரய்யா காலமானதை தொடர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வேலூர் நேஷ்னல் தியேட்டர் அருகிலிருந்து அண்ணா கலையரங்கம் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்டக்குழு சார்பில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்ற மவுன ஊர்வலம் நடைபெற்றது. | படங்கள்: வி.எம்.மணிநாதன்.
புதுச்சேரி மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவையொட்டி நடைபெற்ற நினைவு ஊர்வலம். காங்கிரஸ் கட்சி சார்பில் வைத்திலிங்கம் எம்.பி., நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் சலீம், சிபிஎம்.ராஜாங்கம்,முருகன், உள்ளிடோர் பங்கேற்றனர். | படங்கள்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் அடிப்படை வசதியை செய்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சுயேட்சை எம்எல்ஏ நேரு மற்றும் அவரின் ஆதரவாளர்கள். | படங்கள்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்ட வஉசி அரசு மேல்நிலைப் பள்ளியை திறந்து வைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். அருகில் முதல்வர் ரங்கசாமி. | படங்கள்: எம்.சாம்ராஜ்