புதுச்சேரி வயல்வெளி நகர் பிரதான சாலையில் பாதாள சாக்கடையின் மேல் மூடி உடைந்து சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. | படம்: எம்.சாம்ராஜ்
புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி, வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள விஷ்ணு துர்கையம்மன் கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச கல்யாண வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்
புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி, வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.| படம்: வி.எம்.மணிநாதன்.
புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி, வேலூர் அண்ணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 40-ம் ஆண்டு விழாவையொட்டி, வேலூர் மாவட்ட அலுவலகத்தில் இருந்து அரசு ஊழியர் சங்க கட்டிடம் வரை நடைபெற்ற பேரணி. | படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் வசந்தபுரம் பகுதி சுப்பிரமணிய ஐயர் தெருவில் கான்கிரீட் சாலை சில மாதங்களுக்கு முன் போடப்பட்டது. மீதமுள்ள பகுதியை போடாமல் விட்டு சென்றுள்ளனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூரில் மாலை பொழுதில் சுமார் 2 மணிநேரம் பெய்த மழையில் அண்ணா சாலையில் ஊர்ந்து சென்ற வாகனங்கள்.. | படங்கள்: வி.எம்.மணிநாதன்.
காவிரி ஆற்றில் விநாயகர் சிலை கரைக்கப்படுவதால் திருச்சி காவிரி பாலத்தில் மூங்கில் தடுப்புகள், மேடைகள் அமைக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் காந்தி மார்க்கெட்டில் இருந்து சிந்தாமணி வரை கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்திக்கு பிரதிஷ்டை செய்த மண் விநாயகர் சிலைகளை பொதுமக்கள் காவிரி ஆற்றில் கரைத்தனர். | இடம்: ஸ்ரீரங்கம் காவிரி பாலம்.
திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி பாலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்ட நிலையில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன.
திருச்சி - சென்னை பைபாஸ் சர்வீஸ் சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளில் மழைநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதி கொசு உற்பத்தி மையமாக மாறி வருகிறது.
புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிக்க அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.
வேலூரில் சுமார் இரண்டு மணிநேரம் பெய்த மழையினால் வேலூர் மாநகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட வசந்தம் நகர் முதல் தெருவில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர். | படம்: வி.எம்.மணிநாதன்