Published on : 10 Mar 2025 19:06 pm
நெஞ்செரிச்சலுக்கு இரைப்பையில் அமிலச் சுரப்பைக் கட்டுப்படுத்தும் மருந்துகளும் அமிலத்தைச் சமன் செய்யும் மருந்துகளும் வழங்கப்படுகின்றன.
நெஞ்செரிச்சலை வரவேற்கும் உணவைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாகக் காரம் மிகுந்த, மசாலா கலந்த, எண்ணெய் மிகுந்த, கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை ஒதுக்குங்கள்.
ஒரே நேரத்தில் வயிறு நிறையச் சாப்பிடுவதைவிட மூன்று அல்லது நான்கு மணிநேர இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுவது நல்லது.
கவலையாக இருக்கும்போதோ கோபமாக இருக்கும்போதோ சாப்பிட வேண்டாம். அதுபோல் பேசிக்கொண்டே சாப்பிட வேண்டாம். காபி/தேநீர் அடிக்கடி வேண்டாம்.
இளநீரும் மோரும் நல்லது. காற்றடைத்த செயற்கைப் பானங்கள், குளிர்பானங்கள், சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கச் செல்லுங்கள். படுக்கையின் தலைப்பகுதியை அரை அடியிலிருந்து ஓர் அடி வரை உயர்த்திக்கொள்வது நல்லது.
இடது பக்கமாகப் புரண்டு படுப்பதுதான் சிறந்தது. உடற்பருமன் இருந்தால் குறையுங்கள். அப்போதுதான் நெஞ்செரிச்சல் தொல்லை நிரந்தரமாகத் தீரும். | தொகுப்பு: கு.கணேசன்