Published on : 07 Feb 2025 17:08 pm

டால்பின்கள் - வியத்தகு குறிப்புகள்

Published on : 07 Feb 2025 17:08 pm

1 / 10

மனிதர்களிடம் நெருங்கிப் பழகக்கூடிய உயிரினங்களில் ஒன்று ஓங்கில் (டால்பின்). இது கடல்வாழ் பாலூட்டி. திமிங்கிலத்தின் உறவு.

2 / 10

ஒரு வயது நிரம்பிய ஓங்கில்கள் தங்களுக்கெனத் தனித்துவமான ஒலியை உருவாக்கிக் கொள்கின்றன.

3 / 10

ஓர் ஓங்கிலின் ஒலி ‘வீ-ஊ’ என்று இருந்தால், மற்றொன்றின் ஒலி ‘ஊ-வீ’ என்று இருக்கும்.

4 / 10

ஒருபோதும் இரண்டு ஒலிகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஓங்கில்களின் இந்தத் தனித்துவமான ஒலிகளைக் கொண்டுதான் ஒன்றை மற்றொன்று புரிந்துகொள்கின்றன.  

5 / 10

தாய் ஓங்கில்கள் குட்டி ஓங்கில்களுக்குத் தகவல் தொடர்பு முறைகளைக் கற்பிக்கும் விதம் சுவாரசியமானது. 

6 / 10

ஓங்கில்களின் பார்வை தண்ணீருக்குக் கீழும் மேலும் நன்றாகவே இருக்கும். ஆனால் தொலைவில் இருக்கும் பொருள்களைப் பார்க்க பார்வைத் திறன் போதாது.
 

7 / 10

உலோகம், பிளாஸ்டிக் பொருள்களை வேறுபடுத்தி அறியும் திறனும் ஓங்கில்களுக்கு உண்டு. சில நேரம் ஓங்கில்களின் உடல் நிலையையும்கூடத் தெரிந்துகொள்கின்றன.

8 / 10

ஒங்கில்களின் மற்றொரு வியக்கத்தக்க திறன், அவை தங்கள் ‘எக்கோலொகேஷன்’ மூலம் பெறும் ’ஒலிப் படங்களை’ மற்ற ஓங்கில்களுடன் பகிர்ந்துகொள்வது.
 

9 / 10

தனக்கு அருகில் ஓங்கில்களோ மனிதர்களோ துன்பத்தில் இருந்தால், அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் சுற்றிச் சுற்றி வரும்.
 

10 / 10

ஓங்கில்களின் மொழியை இன்னமும் முழுதாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதுகுறித்து ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. | தகவல்கள்: நஸீமா ரஸாக் 
 

Recently Added

More From This Category

x