Published on : 20 Jan 2025 17:51 pm

தேன் எப்படி இனிக்கிறது?

Published on : 20 Jan 2025 17:51 pm

1 / 9

வேலைக்காரத் தேனீக்கள் நீண்ட தொலைவு பயணம் செய்து, பூக்களில் உள்ள பூந்தேனை உறிஞ்சுகின்றன.

2 / 9

பூந்தேனில் பெரும்பாலும் நீரும் குளுக்கோஸ், சுக்ரோஸ், ஃபிரக்டோஸ் ஆகிய சர்க்கரைகள்தாம் இருக்கின்றன.

3 / 9

உறிஞ்சிய பூந்தேன், தேனீக்களின் வயிற்றில் சேகரிக்கப் பட்டு, கூட்டுக்கு எடுத்து வரப்படுகிறது. இதனால் பூந்தேன் சில வேதி வினைக்கு உள்படுகிறது.

4 / 9

கூட்டில் இருக்கும் தேனீக்கள், வேலைக்காரத் தேனீக்களிடமிருந்து பூந்தேனைப் பெற்று, தங்கள் வாய்களால் நீர்ச்சத்தைக் குறைக்கின்றன. 

5 / 9

அப்போது உருவாகும் நொதிகள் சர்க்கரைகளையும் புரதங்களையும் உடைத்து, அமிலக் கரைசலாக மாற்றுகின்றன.
 

6 / 9

இதன் மூலம் பாக்டீரியா, பூஞ்சைகளால் தேன் கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படுகிறது. 
 

7 / 9

70 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக நீர்ச்சத்து குறைந்த இந்தத் தேன் அறுகோண வடிவில் இருக்கும் தேன் கூட்டின் அறைகளில் வைக்கப்படுகிறது.

8 / 9

நீர்ச்சத்தைக் குறைக்கும் விதத்தில், தேனீக்கள் தங்கள் இறக்கைகளால் சூடான காற்றைச் செலுத்துகின்றன. 

9 / 9

சூடான காற்றினால் இப்போது எளிதில் கெட்டுப்போகாத, இனிப்பான தேன் உருவாகிவிடுகிறது.

Recently Added

More From This Category

x