Published on : 13 Jan 2025 18:03 pm
சூரியனின் ஒளியை நிலா பிரதிபலிப்பதால்தான் இரவில் நமக்கு வெளிச்சம் கிடைக்கிறது. நிலா இல்லாவிட்டால் இரவு நேரம் இருளில் மூழ்கிவிடும்.
நம் பூமிக்கு அருகில் இருக்கும் கோள் வெள்ளி. ஆனால், அதிலிருந்து கிடைக்கும் வெளிச்சம் நமக்குப் போதாது.
வெள்ளியைப் போன்று 2 ஆயிரம் மடங்கு வெளிச்சம் கொண்டது நிலா.
பூமி மீது நிலாவும் நிலா மீது பூமியும் ஈர்ப்பு விசையைச் செலுத்திக்கொண்டிருக்கின்றன.
நிலா இல்லாவிட்டால், பூமி வேகமாகச் சுற்ற ஆரம்பித்துவிடும். அதாவது ஒருநாள் என்பது 6 முதல் 12 மணி நேரத்துக்குள் முடிந்துவிடும்.
பூமி வேகமாகச் சுற்ற ஆரம்பித்து நிலா இல்லாவிட்டால் ஓர் ஆண்டு என்பது ஆயிரம் நாள்களுக்கு மேல் சென்றுவிடும்.
நிலாவின் ஈர்ப்பு விசையால் பூமியில் உள்ள கடல்களில் நீர் மட்டம் உயர்கிறது, குறைகிறது (ஓதம் - Tide).
நிலா இல்லாவிட்டால் நீர் மட்டம் உயர்வதும் குறைவதும் அளவில் வெகுவாகக் குறைந்துவிடும்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா வருவதால்தான் சூரியன் மறைக்கப்பட்டு, சூரிய, சந்திர கிரகணங்கள் உருவாகின்றன.
நிலா இல்லாவிட்டால் சாய்வில் மாற்றங்கள் வரலாம். அதனால் வானிலையில் தாக்கம் ஏற்படலாம். பருவக் காலங்கள் இல்லாமலே போகலாம்.