Published on : 03 Jan 2024 18:03 pm

நீரிழிவு - சித்த மருத்துவக் குறிப்புகள்

Published on : 03 Jan 2024 18:03 pm

1 / 14

உலர்ந்த அத்திப் பழத்தை 1 கிராம் அளவு தினமும் இருவேளை தண்ணீருடன் உண்ணலாம்.

2 / 14

5 கிராம் ஆலம்பட்டைப் பொடியை 50 மில்லி லிட்டர் நீரில் கலந்து தினமும் இருவேளை அருந்தலாம் (30 மி.லி. முதல் 60 மி.லி. வரை அருந்தலாம்).

3 / 14

4 முதல் 10 கிராம் ஆவாரம் பூ பொடியைச் சுடு தண்ணீர் சேர்த்து ஒரு பங்காகச் சுருக்கிக் காய்ச்சி அருந்தலாம்.

4 / 14

1-5 கிராம் கடல் அழிஞ்சில் உடன் 4 பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காகச் சுருக்கிக் காய்ச்சி அருந்தலாம்.

5 / 14

கேழ்வரகுக் கஞ்சி, கேழ்வரகு அடை போன்றவற்றைத் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

6 / 14

1 – 3 கோவைக்காய் சாற்றைத் தினமும் குடிக்கலாம்

7 / 14

கடும் தாகத்தைத் தணிக்க சீந்தில் இலை அல்லது தண்டுப் பொடியை சுடு தண்ணீரில் ஊற வைத்துத் தினமும் இருவேளை அருந்தலாம்.

8 / 14

1 கிராம் தேற்றான் விதைப் பொடியைப் பாலுடன் தினமும் இரு வேளை குடிக்கலாம்.

9 / 14

2-4 கிராம் நாவல் கொட்டைப் பொடியை 50 மி.லி. சுடு தண்ணீரில் கலந்து தினமும் இரு வேளை அருந்தலாம்.

10 / 14

1-3 கிராம் நிழலில் உலர்த்திய இளநீரின் பொடியை நீரில் கலந்து தினமும் இரு வேளை அருந்தலாம்.

11 / 14

மணிச்சம்பா அரிசியை அன்றாட உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

12 / 14

வேகவைத்த மூங்கில் அரிசியை உணவாக எடுத்துக்கொள்ளலாம். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது.

13 / 14

3 கிராம் கருஞ்சீரகப் பொடியை சம அளவு வெந்தயத்துடன் கலந்து தினமும் இரு வேளை உணவுக்கு முன்பாக எடுத்துக் கொள்ளலாம்.

14 / 14

எளிய உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகாசனப் பயிற்சிகளைத் தினமும் செய்ய வேண்டும் என்று தேசிய சித்த மருத்துவ நிறுவனம் பரிந்துரைக்கிறது.

Recently Added

More From This Category

x