Published on : 23 Jun 2025 17:32 pm

சென்னை - மெரினா கடற்கரையில் கூடும் அழகு! - புகைப்படத் தொகுப்பு

Published on : 23 Jun 2025 17:32 pm

1 / 15

சென்னை மெரினா கடற்கரைக்கு ‘நீலக்கொடி சான்றிதழ்’ பெறும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி சார்பில் பணிகள் நடந்து வருகிறது. அதன்படி, கடற்கரை பகுதிகளில் மூங்கிலால் ஆன நிழல் கூரைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள் அமைக்கபட்டு வருகின்றன. | படங்கள்: ம.பிரபு

2 / 15

உலகின் பல்வேறு கடற்கரைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை, கடற்கரை தூய்மை, அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மதிப்பீடு செய்து, டென்மார்க்கை சேர்ந்த சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை, சிறந்த கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கி வருகிறது. 

3 / 15

நீலக்கொடி சான்றிதழ், சர்வதேச அளவிலானது என்பதால், இச்சான்றிதழ் பெறும் கடற்கரைப் பகுதிக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதுடன், அங்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பதால் உள்ளூர் பொருளாதாரமும் வளர்ச்சி பெறும்.

4 / 15

தமிழகத்தில் ஏற்கெனவே கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்நிலையில்தான் சென்னை மெரினா, திருவான்மியூர் உள்ளிட்ட 6 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

5 / 15

குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரையில் அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகள் இப்போது வேகமெடுத்துள்ளன.

6 / 15

சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்கெனவே, ரூ.5.60 கோடியில் மெரினா கடற்கரைப் பகுதியில் நடைபாதை, சைக்கிள் தடங்கள், விளையாட்டுப் பகுதி, கண்காணிப்பு கோபுரம், 360 டிகிரியில் சுழலும் கண்காணிப்பு கேமரா, திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் போன்றவற்றை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. 

7 / 15

தற்போது, சென்னை மெரினா கடற்கரையில் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களும் நிறுவப்பட்டுள்ளன. செடிகளும் நடப்பட்டு வருகின்றன.

8 / 15

மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூங்கில் மூலம் தயாரிக்கப்பட்ட நிழல் தரும் கூரைகள், ஓய்வு நாற்காலிகள், குப்பைத் தொட்டிகள் மற்றும் சோபாக்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்காக 4 சக்கர நாற்காலிகள் வாங்கப்பட்டுள்ளன.

9 / 15
10 / 15
11 / 15
12 / 15
13 / 15
14 / 15
15 / 15

Recently Added

More From This Category

x