Published on : 21 Jun 2025 15:54 pm

எப்படி இருக்கிறது முருக பக்தர்கள் மாநாடு வளாகம்? - புகைப்படத் தொகுப்பு

Published on : 21 Jun 2025 15:54 pm

1 / 25

மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன. | படங்கள்:  நா. தங்கரத்தினம்.

2 / 25

முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களில் பூஜை செய்யப்பட்ட வேல்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தினமும் காலை, மாலையில் 2 மணி நேரம் பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படுகிறது.

3 / 25

மதுரையில் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளை தரிசிக்க தமிழகம் முழுவதும் இருந்து முருக பக்தர்கள், சக்தி வார வழிபாட்டு மன்றத்தினர், ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர், சாய்பாபா பக்தர்கள், ஆன்மிகவாதிகள் என பல்வேறு பக்தி குழுக்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக குவிந்து வருகின்றனர்.

4 / 25

முன்பகுதியில் மேடை அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சிறுவர், சிறுமிகள் முருகன் வேடம் அணிந்து வந்து முருகனை தரிசித்து செல்கின்றனர். 

5 / 25

தினமும் மாலை 6 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படுகிறது. இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பக்தர்கள் கூட்டத்தையும், வாகனங்களையும் ஒழுங்குபடுத்துவதுடன் பக்தர்களுக்கு தண்ணீர், பிரசாதம் வழங்கும் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

6 / 25

இதுகுறித்து முருக பக்தர்கள் கூறுகையில், “மதுரையில் ஒரே இடத்தில் அறுபடை வீடுகள் அமைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. அறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட வேல் முருகனின் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களுக்குள் சென்றதும் உண்மையான கோயில்களுக்குள் சென்ற உணர்வு ஏற்படுகிறது” என்றனர். 

7 / 25

இந்து முன்னணியினர் கூறும்போது, “முருகனை காண வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மாநாட்டு திடலில் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. முருக பக்தர்கள் மாநாடு நாளை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக அறுபடை வீடுகளின் பின்பகுதியில் 8 லட்சம் சதுர அடிபரப்பளவில் மேடை, இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. 

8 / 25

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். இதில் 5 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இவர்கள் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசமும், திருப்புகழ், முருகன் பாடல்கள் பாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

9 / 25

மாதிரி அறுபடை வீடுகளில் தரிசனம் செய்ய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம் செய்ய சனிக்கிழமை காலை 10.40 மணியளவில் மாநாட்டு வளாகத்திற்கு வருகை தந்தார். 

10 / 25

அறுபடை வீடுகளுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி பின்னர் வெளியில் வந்த கூடியிருந்த பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அறுபடை வீடு முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

11 / 25

ஆளுநர் ரவி கூறும்போது, “முருகன் நமக்கு முக்கியமான கடவுள், நமது அடையாளமாகத் திகழ்கிறார். நான் அனைத்து அறுபடை வீடுகளுக்கும் சென்றுள்ளேன். ஆனால் இங்கு அறுபடை வீடுகளையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது. இதனை ஒருங்கிணைத்த இந்து முன்னணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

12 / 25
13 / 25
14 / 25
15 / 25
16 / 25
17 / 25
18 / 25
19 / 25
20 / 25
21 / 25
22 / 25
23 / 25
24 / 25
25 / 25

Recently Added

More From This Category

x