Published on : 13 Jun 2025 17:56 pm
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தை வெள்ளிக்கிழமை காலை பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்தார்.
மீட்புப் பணிகள் குறித்து பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
பின்னர் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு சென்ற மோடி, அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
பிரதமருடன் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.
“அகமதாபாதில் துயரமான விமான விபத்துக்குப்பின் தப்பிப்பிழைத்த ஒருவர் உட்பட காயமடைந்தோரை சந்தித்து, இக்கட்டான இந்தத் தருணத்தில் அவர்களுடனும், அவர்களின் குடும்பத்தினருடனும் நாங்கள் இருக்கிறோம் என்பதை உறுதி செய்தேன். அவர்கள் விரைந்து குணமடைய ஒட்டுமொத்த தேசமும் பிரார்த்திக்கிறது” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.