Published on : 03 Dec 2024 10:01 am

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக, சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால், ஆறுகள், ஏரிகளுக்கான நீர் வரத்து கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

சேலம் மாநகர் வழியாக பாய்ந்தோடும் திருமணிமுத்தாற்றிலும் பல ஆண்டுகளுக்குப் பின்னர், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பெரும்பாலான நாட்களில், அதிகளவில் கழிவு நீரை மட்டுமே சுமந்து சென்ற திருமணிமுத்தாறு, ஒரு காட்டாறு போல வேகமெடுத்து பாய்ந்து செல்கிறது.

இதனால் சேலம் கந்தம்பட்டி அருகே பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையை தண்ணீர் மூழ்கடித்து சென்றது.

இதனால் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் மற்றும் கார் பழுது நீக்கும் கடைகளில் தண்ணீர் புகுந்தது.

மேலும் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.














