Published on : 15 Aug 2024 11:45 am
நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் தலைவர் சுனில் பலிவால் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் பரிசுத்தொகைகளை வழங்கி சிறப்பித்தார்.
விருதுநகரில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்த மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, மூவர்ண பலூன்களை பறக்க விட்டார்.காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் - இ.மணிகண்டன்
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மொ.நா.பூங்கொடி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் - பி.டி.ரவிச்சந்திரன்
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மூவர்ண பலூன்களை பறக்கவிட்டனர் - இரா.கார்த்திகேயன்
சென்னை ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
உதகை அரசு கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தேசிய கொடியினை ஏற்றி வைத்து பல்வேறு துறைகளின் சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.25.56 லட்சம் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் - ஆர்.டி.சிவசங்கர்
போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வோடு உதகையில் சுதந்திர தின மாரத்தான் ஓட்டம் நடந்தது. உதகையில் இருந்து குன்னூர் செல்லக்கூடிய சாலையிலுள்ள பள்ளி முன்பு தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை கூடுதல் எஸ்பி சவுந்தரராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். - ஆர்.டி.சிவசங்கர்
மாணவிகள் மூவர்ணக் கொடியை கையில் ஏந்தி முன்னே ஓடிச் செல்ல அதன் பின்பு மாணவ, மாணவிகள் உற்சாகமாக ஒடினர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் - இ.ஜெகநாதன்
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப் பெருந்தகை தேசியக்கொடியை ஏற்றினார். காங்கிரஸ் தொண்டர்கள் நீளமான தேசியக் கொடியை கையில் ஏந்தி மரியாதை செலுத்தினர். | படம்: எஸ்.சத்யசீலன்
தெற்கு ரயில்வே சார்பில் சென்னை பெரம்பூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என்.சிங் கொடியேற்றி ரயில்வே பாதுகாப்பு படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். | படங்கள்:எஸ். சத்தியசீலன்
தெற்கு ரயில்வே சார்பில் சென்னை பெரம்பூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என்.சிங் கொடியேற்றி ரயில்வே பாதுகாப்பு படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். | படங்கள்:எஸ். சத்தியசீலன்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் வியாழக்கிழமை காலை தேசியக்கொடி நடராஜர் பாதத்தில் வைத்து சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது . பின்னர் மேளதாளம் வழங்க கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் தேசிய கொடி எடுத்துச் செல்லப்பட்டு142 அடி உயரமுள்ள கீழ கோபுரத்தின் உச்சியில் ஏற்றப்பட்டது | க.ரமேஷ்
ஃபஜ்ரு தொழுகைக்கு பிறகு காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள மிகவும் பழமை வாய்ந்த லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் வளாகத்தில் சுதந்திர தின விழா கொடியேற்றம் நடைபெற்றது | க.ரமேஷ்
புதுச்சேரி அரசு சார்பில் புதுவை கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நடந்த சுதந்திர தினவிழாவில் முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். | செ. ஞானபிரகாஷ்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான பி.ஆர். நினைவகத்தில் சுதந்திர தின கொடியினை மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஏற்றி வைத்தார்.
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தேசிய கொடியேற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் தொண்டர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
கோவை வஉசி மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளைப் பார்வையிட்டார் | படங்கள்: ஜெ.மனோகரன்
கோவை வஉசி மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளைப் பார்வையிட்டார் | படங்கள்: ஜெ.மனோகரன்
கோவை வஉசி மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளைப் பார்வையிட்டார் | படங்கள்: ஜெ.மனோகரன்
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மொ. நா. பூங்கொடி, உலக சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெண் புறாக்களை பறக்கவிட்டார்| படம் : நா. தங்கரத்தினம்