இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ‘தாய்தமிழ் பள்ளிக்கு’ நிதி உதவியும், ஓவிய கலைஞர் ஜெயராஜுக்கு ரு.1 லட்சமும் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் சோமாண்டர்குடி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஞான பிரகாசத்தின் பணிகளுக்காகவும், 'குறள் வழி கல்வி' என திருக்குறளின் மேன்மையை முன்னெடுத்து வரும் திருச்சி சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்குப் பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டது.