பணம் திருட்டு வழக்கில் இருவர் கைது :

பணம் திருட்டு வழக்கில் இருவர் கைது :
Updated on
1 min read

அவிநாசி - திருப்பூர் சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றிக்கொண்டிருந்த 2 இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். ஹைதராபாத் கோதகாடா பகுதியைச் சேர்ந்த நரசிம்மன் மகன் விக்கி (எ) விக்ரம் (19), ராமு மகன் விஷ்ணு (18) ஆகியோர் என்பது தெரியவந்தது. கடந்த மாதம் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த திருப்பூர் வேலம்பாளையம் காவிலிபாளையம்புதூர் பகுதியைச் சேர்ந்த வசந்த்குமார் என்பவரின் இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த ரூ.1.80 லட்சம் பணத்தை திருடியவர்கள் என்பது தெரியவந்தது.

இதேபோல, உடுமலை, காங்கயம் உள்ளிட்ட காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவிநாசி போலீஸார் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in