போச்சம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு :

போச்சம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு :
Updated on
1 min read

போச்சம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பொங்கனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமசாமி (62). இவர் நேற்று முன்தினம் விவசாய பணிகளுக்காக தன் நிலத்தில் இருந்த வேப்பமரத்தின் கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக கிளை அருகில் இருந்த மின்ஒயரில் பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ராமசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக புகாரின் போச்சம்பள்ளி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in